திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்குத் துவங்கிய மழை 5 மணி நேரம் வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் நாள் முழுவதும் விட்டு விட்டு பெய்தது. இரவு 11:00 மணிக்கு துவங்கிய மழை நேற்று காலை 7:00 மணி வரை இடைவிடாது கொட்டியது.இதன் காரணமாக திருக்கோவிலுாா், சந்தப்பேட்டை, முஹம்மது சாகிப் நகர், வெள்ளைப் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.திருக்கோவிலுார் பெரிய ஏரி ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்றைய மழை காரணமாக திருக்கோவிலுார் - கள்ளக்குறிச்சி சாலைக்கு மேல் தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏரியின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலும், தண்ணீர் வெளியேறும் கலுங்கல் பகுதியை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE