கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 'ஜூம் ஆப்' செயலி மூலம் இன்று 18ம் தேதி நடக்கிறது.கலெக்டர் கிரண் குராலா செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 18ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தில், விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், கால்நடை, கூட்டுறவு, ஆதிதிராவிடர், வருவாய்த் துறைகள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 'ஜூம் ஆப்' செயலி மூலம் தெரிவிக்கலாம். தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE