திட்டக்குடி; திட்டக்குடியில் மின் சிக்கன வார விழாவையொட்டி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திட்டக்குடி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் சக்திவேல் தலைமை தாங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார். உதவி பொறியாளர்கள் சண்முகசெழியன், சக்திவேல், பண்டக மேற்பார்வையாளர் மணிவேல், மின்பாதை ஆய்வாளர் வீரராசு, கணக்கீட்டாளர் சரவணன் உடனிருந்தனர்.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் மின்வாரிய அலுவலகம் சார்பில் நுகர்வோருக்கு மின்சாரம் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். உதவி மின்பொறியாளர் அருள் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். முதல் பிரதியை நுகர்வோர் சங்க தலைவர் குமரவேல் பெற்றுக் கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE