புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியம், துணிசிரமேடு பகுதியில் மழை வெள்ளம் பாதித்த வயல்களை வேளாண் இயக்குனர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.கீரப்பாளையம் ஒன்றியம், துணிசரமேடு சுற்றுபகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களில் வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்து, பாதிப்பு குறித்த விவரங்களை விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் சேகரித்து, பாதிப்பின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்கும் என்றார்.வேளாண் துறை அதிகாரி கடலுார் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக் குமார், துணை இயக்குநர் பூங்கோதை, கீரப்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை உதவி அலுவலர் கோபி, துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி,வெங்கடேசன், துணிசிரமேடு ஊராட்சித் தலைவர் ஆனந்தி செல்வராஜ், சிவக்குமார், பாக்கியராஜ், மகாலிங்கம், முருகானந்தம், வி.ஏ.ஓ., முத்துக் குமரன், சுபஸ்ரீ, மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE