உசிலம்பட்டி : உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் " இந்தியாவில் வேளாண்மைத் துறையில் கோவிட்- 19 ம் அதன் தாக்கமும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் ரவி வரவேற்றார். தாளாளர் பாண்டியன், துணை முதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், நிர்வாக குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை பொருளியல் துறை தலைவர் சுவாமிகண்ணன் பேசினார். கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE