திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த கூடலுார் ஊராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.தொளார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செல்வஅரசி அறிவுறுத்தலின் பேரில், டெங்கு முன் தடுப்புப்பணியின் ஒரு பகுதியாக கூடலூர் ஊராட்சியில் புகைமருந்து அடிக்கும் பணி நடந்தது.கூடலுார் ஊராட்சி தலைவர் கார்த்திக்கேயன், புகைமருந்து அடிக்கும் பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்தலைவர் ஜெயா வாஞ்சிநாதன், ஊராட்சி செயலர் உஷா முன்னிலை வகித் தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன் மேற்பார்வையில் களப்பணியாளர்கள் கூடலூர் மற்றும் குடிகாடு கிராமத்திலுள்ள தெருக்கள் அனைத்திலும் வீடு, வீடாக புகைமருந்து அடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE