திட்டக்குடி; திட்டக்குடி பகுதியில் கனமழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தாலுகா அலுவலகம் முன் த.வா.க.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.த.வா.க., நகர செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பிரசாத் வரவேற்றார். நகர தலைவர் முருகன், அமைப்பு செயலாளர் சதீஷ், துணை அமைப்பாளர் அருண், மங்களூர் ஒன்றிய தலைவர் முருகன், பொருளாளர் ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித் தனர். ஒன்றிய செயலாளர் சுரேந்தர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில நிர்வாகிகள் ஜெயபால், தமிழரசன், மாவட்ட பொருளாளர் கண்ணன், மகளிரணி தலைவர் ஜெயா கலியமூர்த்தி பேசினர். ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நகர பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE