திட்டக்குடி; திட்டக்குடி அருகே சாலைபோடும் பணியில் குறைபாடு உள்ளதாக கூறி பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திட்டக்குடி அடுத்த ராமநத்தம் பெரங்கியம், அம்பேத்கர் நகர பகுதியில் பேப்ரிக் டைல்ஸ் சாலை போடும் பணி நடக்கிறது. இதில் 100 மீட்டர் துாரத்திற்கு அமைக்கும் சாலையில் 3.75 மீட்டர் அகலம் இருக்க வேண்டும்.ஆனால் 3 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் மக்கள் தடுத்தனர்.தகவலறிந்த ராமநத்தம் ஊராட்சித் தலைவர் செல்லமுத்து நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக சிலர் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை குறித்த தகவல்களை பி.டி.ஓ.,விடம் தெரிவித்து சரி செய்வதாக ஊராட்சித் தலைவர் கூறினார்.இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE