சிதம்பரம் - சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து வி.ஏ.ஓ., க்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அடுத்த நாஞ்சலுார் வி.ஏ.ஓ., லஷ்மி பிரியாவை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து வி.ஏ.ஓ.,க்கள் பல்வேறு கட்ட போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ., விற்கு வேறு இடத்தில் பணி அமர்த்த உத்தர விட்டதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE