சென்னை : விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு, போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, டில்லியில், பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இன்று(டிச.,18) போராட்டம் நடத்த முடிவு செய்தன.

இப்போராட்டத்திற்கு அனுமதி கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீசார், அனுமதி அளிக்க மறுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE