நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலை மோச மாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.சி.என்.பாளையம் - சாத்திப்பட்டு செல்லும் வழியில் மழவராயநல்லுார், பட்டீஸ்வரம், கொஞ்சிக் குப்பம், இடை யர்குப்பம், பூவன்காலனி, நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் பலர் தினசரி தேவைகளுக்கு பண்ருட்டிக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில் அதிக பஸ் போக்குவரத்து இல்லாததால் பொது மக்கள் பைக்குகளில் சென்று வருகின்றனர். இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்யும் மழையில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. பைக்குகளில் செல்வோர் சாலை தெரியாமல் பள்ளத்தில் விழுகின்றனர்.இந்த சாலை கடந்த 30 ஆண்டுகளாக அகலப்படுத்தால் 3 1/2 மீட்டர் அளவிற்கே உள்ளது.இதனால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சாலையை அகலப்படுத்தி தரமான சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE