பரங்கிப்பேட்டை - முதல்வர் திறந்து வைத்த, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, பயன் பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சேதமடைந்ததால், பழைய அலுவலகத்திற்கு, பின்புறம் கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில், புதிய கட்டடம் கட்டி முடித்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் பழனி சாமி திறந்து வைத்தார்.கடந்த அக்டோபர் மாதம் புதிய அலுவலகத்தில், உயிரிப்பல் வகைமை மேலாண்மை குழு கூட்டம் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில், நடந்தது. ஆனால் புதிய அலுவலகம், பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.தற்போதுள்ள பழைய அலுவலகத்தில், போதிய வசதிகள் இல்லாததால், பொது மக்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கின்றனர்.புதியதாக கட்டியுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE