உத்திரமேரூர் - பருவநிலை மாற்றத்தால், காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.உத்திரமேரூர் வட்டாரத்தில், சமீபத்தில் பெய்த மழையால், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது, பனிப்பொழிவும் நிலவுகிறது.பருவநிலை மாற்றத்தால், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், இருமல், சளி, காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால், சில தினங்களாகவே, சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றி, கழிவு நீர் கால்வாயில் கொசு மருந்து அடிக்கவும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE