உத்திரமேரூர் - உத்திரமேரூர் சிற்றேரி, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், நிரம்பியுள்ளதால், ஏரிப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, 5,636 ஏக்கர் பாசன பரப்பளவும், 95.81 கோடி கன அடி கொள்ளளவும் கொண்டது. 2015க்குப் பின், ஏரி முழுமையாக நிரம்பவில்லை.இந்நிலையில், பருவமழை, செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தாழ்வாக உள்ள இரு கலங்கலை பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளால் அடைத்ததால், நேற்று காலை, நிலவரப்படி, மொத்தமுள்ள, 20 அடி உயரத்தில் 18.5 அடி நிரம்பியது.இதனால், சிற்றேரி முழுமையாக நிரம்பி, மூன்றாவது கலங்கல் வழியாக, உபரி நீர் நேற்று, காலை முதல், வெளியேறுவதால், அரசாணிமங்கலம், கம்மாளம்பூண்டி, காவனுார்புதுச்சேரி, அத்தியூர் மேல்துாளி, அகரம் துாளி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பும் என, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகளுக்குப்பின், சிற்றேரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில், அப்பகுதிவாசிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர்.அதேபோல், இரண்டு போகம் சாகுபடிக்கான தண்ணீர் இருப்பு உள்ளதால், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE