மதுராந்தகம் - மாமண்டூரில், இருசக்கர வாகனம் மூலம், ஆடுகள் திருடி சென்ற வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.மதுராந்தகம் அடுத்த, மாமண்டூர் பகுதியில், நேற்று, அடையாளம் தெரியாத நபர்கள், இரண்டு இருசக்கர வாகனங்களில், ஆடுகளை கடத்திக் கொண்டு வேகமாக சென்றனர்.ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த படாளம் போலீசார், அவர்கள் மீது, சந்தேகம் ஏற்பட்டு, இருசக்கர வாகனங்களை பின் தொடர்ந்துள்ளனர்.போலீசார் துரத்துவதை அறிந்த ஆடு திருடர்கள், சாலையிலேயே ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு, விட்டு அருகே இருந்த விவசாய நிலம் வழியாக, தப்பி ஓடினர்.இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று ஆடுகளையும், படாளம் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE