கண்ணகி நகர் - வீடுகளில், மொபைல் போன்கள் திருடிய கொலை குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.கண்ணகி நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் இருந்தனர். எழில் நகரில், சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நபரை மடக்கி விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், மூன்று மொபைல் போன்கள், ஒரு ப்ளூடூத் இருந்தது. இவை, வீடுகளில் இருந்து திருடி வந்தது என, தெரிந்தது.விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த தவான், 20, எனவும், பிப்ரவரியில், தேவகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய நபர் எனவும் தெரிந்தது. போலீசார், தவானை கைது செய்து, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE