உடுமலை:உடுமலை பகுதியில், உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகள், பட்டு வளர்ச்சித்துறையின், கோவை, தர்மபுரி, சேலம், ஒசூர் ஆகிய அரசு கொள்முதல் மையங்களில், விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களாக இதற்கு, போதிய விலை கிடைக்காமல் இருந்தது. தற்போது, தரத்தின் அடிப்படையில், கிலோ, 456 ரூபாய் வரை, இதன் விலை அதிகரித்துள்ளது.நேற்று ஒசூர் தவிர்த்து பிற கொள்முதல் மையங்களில், கூடுகள் விலை, 400 ரூபாய்க்கும் அதிகமாகவே இருந்தது. விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE