ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதியில் பாக்கு சீசன் நிலவுவதால், உலர வைத்து, இருப்பு வைத்துக்கொள்ள, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதியில், 54 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக தென்னை சாகுபடி உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தென்னையில் கூடுதல் வருமானத்துக்காக, ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், டிச., முதல் பிப்., மாதம் வரையில் பாக்கு அறுவடை சீசன் நிலவுகிறது.சீசனின் போது, விவசாயிகள் பாக்கு அறுவடை செய்து உலர வைத்து விற்பனை செய்கின்றனர். பலரும் பாக்கு உலர வைக்க களம் இன்றி சிரமப்படுகின்றனர். பாக்கு அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், ஒன்றியம் முழுவதிலும் பாக்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலுள்ள உலர்களத்தை பயன்படுத்திக்கொள்ள, விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:விற்பனைக்கூடத்தில் தற்போது, ஏழு உலர்களங்களை பயன்படுத்தலாம். உலர வைத்த விளை பொருளை பாதுகாப்பாக வைக்க, 6,700 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்கு உள்ளது. இருப்பு வைக்கும் விளை பொருளுக்கு, தற்போது, மூன்று லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது.விற்பனைக்கூடத்திலுள்ள வசதியை பயன்படுத்தி, இலவசமாக பாக்கு உலர வைத்து, இருப்பு வைக்க விவசாயிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE