உடுமலை:பொங்கல் பண்டிகையையொட்டி, பயனாளிகளுக்கு வினியோகம் செய்ய, உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு, இலவச வேட்டி, சேலைகள் அனுப்பபட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பயனாளிகளுக்கு, இலவச வேட்டி,சேலைகள், பொங்கல் பண்டிகையையொட்டி, வழங்கப்படுகிறது. உடுமலை தாலுகாவில், 65 ஆயிரம் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர்.நடப்பாண்டு, இத்திட்டத்தின் கீழ் வினியோகிக்க, முதற்கட்டமாக, 15 ஆயிரம் வேட்டி, சேலைகள் உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருத்துரு அடிப்படையில், வேட்டி, சேலைகள் வந்ததும், ரேஷன்கடை வாரியாக பிரித்து, அனுப்பி, பயனாளிகளுக்கு வினியோகம் துவங்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE