ஈரோடு: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமையில், ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, நான்காவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை, உணர்வுகளை ஏற்று, அதனை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்றும் தொடர்ந்த போராட்டத்தில் விவசாயிகள், பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். டில்லியில் நடந்து வரும் போராட்டத்தில், இறந்த விவசாயிகளுக்கு, பெண்கள் சார்பில் அஞ்சலி செலுத்தி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். நேற்றைய போராட்டத்தில் விவசாயிகளுடன், அதிக எண்ணிக்கையில் பெண்களும் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE