சேலம்: சேலத்தில் இரு இடங்களில், முதல்வர் பழனிசாமி, இன்று, 'மினி கிளினிக்'கை திறந்து வைக்கிறார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் காலை, விமானம் மூலம், சேலம் வந்தார். கரூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த அரசு விழாக்களில் பங்கேற்று, சேலம் திரும்பியுள்ளார். இன்று காலை, வீரபாண்டி சட்டசபை தொகுதியின், பனமரத்துப்பட்டி, வாணியம்பாடியில், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்து பேசுகிறார். தொடர்ந்து, சேலம் மேற்கு சட்டசபை தொகுதி, ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில், 'மினி கிளினிக்'கை திறந்து வைக்கிறார். பின், ஓமலூர் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்துகிறார். நாளை, இடைப்பாடி சட்டசபை தொகுதி, சீரகனூரில், 'மினி கிளினிக்'கை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து இருப்பாளி, வெள்ளநாயக்கன்பாளையம் பகுதிகளிலும், 'மினி கிளினிக்'குகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையடுத்து, ஆலச்சிபாளையத்தில், மினி கிளினிக்கை திறந்துவைப்பதோடு, அங்கு நடக்கும் விழாவில் பங்கேற்று பேச உள்ளார். மேலும், இடைப்பாடி பயணியர் மாளிகையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாலை, எட்டிக்குட்டைமேட்டில், மினி கிளினிக்கை திறந்து வைத்து பேச உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE