தர்மபுரி: தர்மபுரியில், தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதளங்களை எவ்வாறு கையாளுவது குறித்த பயிற்சி பாசறைக்கூட்டம் காணொலி வழியாக நடந்தது. மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில பிரசார குழுத்தலைவி சேலம் சுஜாதா தலைமை வகித்தார். இதில், மாநில மகளிர் அணி செயலாளர் எம்.பி.,கனிமொழி காணொலி காட்சி மூலம் பங்கேற்று, மகளிர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், 2021 சட்டசபை தேர்தலுக்கு மகளிர் அணியினர், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றுவது, சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கினார். வலைதளங்களை கையாளுவது எவ்வாறு என்பது குறித்து, நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், மாவட்ட மகளிர் அணித்தலைவி சிவகாமி, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தொண்டர் அணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE