தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, நூலஹள்ளியில் வசிக்கும் ராஜேஸ்வரி, 30, என்பவர் கணவர், குழந்தைகளுடன், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நூலஹள்ளியில், நான், என் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்தில் இருந்த தென்னை மரங்களை, சில நாட்களுக்கு முன், முன்விரோதம் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டிசாய்த்து நாசம் செய்தனர். அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர், வீட்டிற்கு வந்து என்னையும், குழந்தைகளையும் மிரட்டி வருகின்றனர். எனவே, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE