தர்மபுரி: தர்மபுரி, அரசு அங்காடியில் கடந்த, 15 நாட்களில், 28 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போகின. தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும், தினசரி ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில் கடந்த, 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், ஒரு விவசாயி மட்டும், 32 கிலோ மஞ்சள் பட்டுக்கூடுகளை, ஒரு குவியலாக கொண்டு வந்திருந்தார். இது கிலோ, 181 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 5,855 ரூபாய். இதேபோல், 139 விவசாயிகள், 250 குவியல்களாக, 8,724 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது சராசரியாக, 326 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 28 லட்சத்து, 39 ஆயிரத்து, 677 ரூபாய். இரண்டு பட்டுக்கூடுகளின் மொத்த மதிப்பு, 28 லட்சத்து, 45 ஆயிரத்து, 532 ரூபாய். கடந்த, 15 நாட்களில் மட்டும் நடந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 42 ஆயிரத்து, 684 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE