கிருஷ்ணகிரி: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், விவசாயி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே பிள்ளையார் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவர் மனைவி விஜயசாந்தி, 22; இவர் கடந்த ஆக.,8ல், குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டின் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விஜயசாந்தியின் தாய் முனியம்மா, ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இதனால் மன உளைச்சலில், தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இது குறித்து, ஓசூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றி, கிருஷ்ணனை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE