திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மாநில வளர்ச்சி திட்டக்குழு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ரத்தினசபாபதி தலைமை வகித்தார். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பொன்னையன், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், நிருபர்களிடம் பொன்னையன் கூறியதாவது: சிறு, குறு தொழில்களுக்கு நிதி ஒதுக்க, மத்திய அரசு முன்வந்துள்ளது. மார்க்கெட்டில் தேவை என்ன என்ற தொழிலை கண்டுபிடித்து, உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர வேண்டும். கிராம பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தில் அதிக இன்ஜினியரிங் கல்லூரிகளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். ரஜினி அரசியலுக்கு வருவதாக, 20 ஆண்டுகளாக கூறி வருகிறார். அவரது ரசிகர்கள், பல்வேறு கட்சிகளில் ஐக்கியமாகி உள்ளனர். எம்.ஜி.ஆர். அரசியல்வாதியாகவே, சினிமா துறையில் நடித்தார். 1957 முதல், அண்ணாதுரை கொள்கையை பரப்புவராகவே அரசியலில் வந்தார். தமிழ் மண் வாசனை திராவிட கொள்கை கொண்டது. வட மொழி மற்றும் சமஸ்கிருத தாக்குதலை ஏற்காது, தமிழ் மொழிக்கு ஏற்ப அரசியல்தான், இங்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது என் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE