வேலூர்: வேலூர் அருகே, பட்டா மாற்ற விவசாயியிடம், 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற, பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த, இலவம்பாடியை சேர்ந்தவர் நடராஜன், 50. இவர் பட்டா மாற்ற, ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். 2,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பட்டா மாற்றம் செய்து, உத்தரவு வழங்குவதாக இலவம்பாடி வி.ஏ.ஓ., ரேவதி, 30, கூறினார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, 2,500 ரூபாயை வி.ஏ.ஓ., ரேவதி லஞ்சமாக வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து, வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ரேவதியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நேற்று உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE