புதுடில்லி: பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், நேற்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள், இரண்டு பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். அதைப் பார்த்த, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை எச்சரித்தனர்.எனினும், அதைப் பொருட்படுத்தா மல் அவர்கள் அத்துமீறி நுழைந்ததால், நம் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்; இதில், அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ஏ.கே., 56 ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி, 90 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE