சென்னை : ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பத்தாண்டுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரியாக எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆனந்த்பாபு என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது ஜாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் போது ஜாதிவாரி கணக்கு ஏன் எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதனால், இந்த மனுவை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE