நாமக்கல்: நாமக்கல்லில், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டு போராட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமை வகித்தார். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். கடந்த, மூன்று ஆண்டுகளாக வளர்ச்சி மற்றும் சேவைகளை உயர்த்திட, ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய ஊழியர்கள் அனைவருக்கும், 1995ம் ஆண்டு திட்டத்தின்படி பழைய பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊதிய உயர்வு, பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE