குமாரபாளையம்: குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில், சில மாதங்களுக்கு முன் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. இணைய இணைப்பு கிடைக்காமல் அதிக நேரமாகி, பெரும்பாலும் சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது: முன்பு மிகவும் தாமதமானது. ஆனால், தற்போது இணைய இணைப்பு கிடைத்து உடனுக்குடன் ரேகை பதியும் வகையில் தொழில்நுட்பத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் உடனுக்குடன் பொருட்களை வாங்கி செல்ல முடிகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE