குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கிறிஸ்தவ மதத்திற்கு மாறச்சொல்லி பிரசாரம் மேற்கொண்ட இருவரை, பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஈரோட்டை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், 62, அற்புதம், 45, இருவரும் குமாரபாளையம் அருகே, வீ.மேட்டூர் பகுதியில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறச்சொல்லி, துண்டு பிரசுரங்கள், பைபிள் ஆகியவற்றை கொடுத்து பிரசாரம் மேற்கொண்டனர். இதைக் கண்ட, தட்டான்குட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE