குமாரபாளையம்: குமாரபாளையத்தில், 20 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணைகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். குமாரபாளையம் சத்யாபுரி, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, முருங்கைகாய் காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சர் தங்கமணி பெற்றார். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய தொகைக்கான ஆணைகளை, 20 பேருக்கு அமைச்சர் வழங்கினார். ஆர்.டி.ஓ., மணிராஜ், நகர, அ.தி.மு.க., செயலாளர் நாகராஜன், நகர்மன்ற முன்னாள் தலைவர் தனசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE