அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது, கடைசியாக பெறும் ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE