கரூர்: வேலாயுதம்பாளையம் அருகில் எலக்ட்ரீஷியன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 27. இவர், எலெக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 4.30 மணிக்கு, கரூர் அருகில், வேலாயுதம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE