புதுடில்லி:நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, கார்ட்டூன் கலைஞர் ரச்சிதா தனிஜா ஆகியோருக்கு, நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, 32. இவர், கடந்த மாதம், 'டுவிட்டரில்' 'உச்ச நீதிமன்றம் காவிமயமாகிறது' என, விமர்சித்து, உச்ச நீதிமன்ற கட்டடத்தின் மீது காவிக் கொடி பறப்பது போல், படமும் வெளியிட்டிருந்தார். இதேபோல், கார்ட்டூன் கலைஞரான ரச்சிதா தனிஜாவும், உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்திருந்தார். இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அசோக் பூஷண் தலைமையில், நீதிபதிகள் ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்தது.உச்ச நீதிமன்றத்தை அவமதித்தது பற்றி, ஆறு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க கோரி, இருவ ருக்கும் நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE