கும்மிடிப்பூண்டி : ஆரம்பாக்கம் பகுதியில், ஆங்காங்கே குப்பை குவிக்கப்படுவதால், அங்கு, சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், 150க்கும் மேற்பட்ட கடைகள், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில், தினசரி சேகரமாகும் குப்பையை, அந்தந்த பகுதியில் ஒதுக்குபுறமாக உள்ள இடங்களில் குவிக்கப்பட்டு வருகின்றன.ஆரம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பையை முறையாக கையாள தவறுவதால், கண்ட இடங்களில் குப்பை குவியல்கள் காணப்படுகின்றன.
அதனால், ஒட்டுமொத்த ஆரம்பாக்கம் ஊராட்சியும், சுகாதாரமற்ற சூழலில் சிக்கி தவிக்கிறது.எனவே, ஆரம்பாக்கம் ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி, சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என, ஆரம்பாக்கம் பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE