திருவள்ளூர் : காணொலி காட்சி மூலம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 24ம் தேதி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான கூட்டம், வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற உள்ளது.மாவட்ட அளவில் துறை சார்ந்த தலைமை அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்திலும், வட்டார அளவில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்பர்.
இதற்கு ஏதுவாக, கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, விவசாயிகள் அனைவரும் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், ஒருங்கிணைந்து பங்கேற்குமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE