ஆர்.எஸ்.மங்கலம் : மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழைக்கு, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக புல்லமடை, ராமநாதமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, சீனாங்குடி, சேத்திடல், வண்டல், வரவணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நடப்பு ஆண்டில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மிளகாய் செடிகள் குத்து செடிகளாக வளர்ச்சியடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், மிளகாய் செடிகளில் தண்ணீர் தேங்கி மிளகாய் செடிகள் மூழ்கியுள்ளன.பல ஆயிரங்களை செலவு செய்து மிளகாய் நடவு செய்துள்ள நிலையில், மழையால் செடிகள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE