சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:வருமான வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, 2019 -- 20ம் நிதியாண்டுக்கான, வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல, தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய, ஜனவரி, 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது.எனவே, கணக்கு தணிக்கைக்கு அவசியம் இல்லாத, வரி கணக்குகளை, வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அபராதம் செலுத்தி, ஜன., முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE