செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், வரும், 30ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், காணொலி காட்சி மூலம் நடக்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும், பங்கேற்கின்றனர்.
இதில், வேளாண் மட்டும் இன்றி, தோட்டக்கலை, வருவாய், கூட்டுறவு, மின் வாரியம் உள்ளிட்ட சார்புத் துறை சம்பந்தமாகவும் புகார் தெரிவிக்கலாம்.மாவட்டத்தில், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில், காணொலிக் காட்சி மூலம், விவசாயிகள், இக்கூட்டத்தில், முக கவசம், சமூக இடைவெளி விட்டு, பங்கேற்கலாம் என, கலெக்டர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE