செங்கல்பட்டு : பாலுார் ஏரி, 10 ஆண்டு களுக்கு பின் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, பாலுார் கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து, பாலுார் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் உள்ள, விவசாய நிலங்களுக்கு, கால்வாய் மூலம், தண்ணீர் செல்வது வழக்கம்.கடந்த, 10 ஆண்டுகளாக, ஏரி நிரம்பவில்லை. சில தினங்களாக, 'நிவர்' புயல் மற்றும் கன மழையில், மேலேச்சரி ஏரியிலிருந்து உபரி நீர், மேற்கண்ட ஏரிக்கு வந்தடைந்தது. இதனால், ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாலுார் ஏரியிலிருந்து செல்லும், பாசன கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், விவசாய நிலங்களுக்கு, தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாய நிலங்களுக்கு, தண்ணீர் செல்ல, வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE