சோழிங்கநல்லுார் : சோழிங்கநல்லுார், லால்பகதுார் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 33; எலக்ட்ரீஷியன். குடிப்பழக்கம் உள்ளதால், அடுத்தவருடன் வம்பு வழக்கில் அதிகம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இவரின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் பானுமதி. அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். சதீஷ்குமார் தொல்லை தாங்காமல், பானுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, விசாரணைக்காக, செம்மஞ்சேரி ரோந்து போலீசார் வாயிலாக, சதிஷ்குமார் நேற்று இரவு காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார்.காவல் நிலையம் வரும்போது, குடிபோதையில் இருந்ததால், அவரை விசாரணைக்காக மறுநாள் வரும்படி கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சதீஷ்குமார், திடீரென ராஜிவ்காந்தி சாலையில் வந்துக் கொண்டிருந்த பஸ் முன் பாய்ந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணைக்கு வந்த நபர், தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE