பள்ளிக்கரணை : பள்ளிக்கரணையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனார் ஒருவர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 32; கொத்தனார்.இவர், பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் நடந்து வரும் கட்டுமான பணியில், நேற்று ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக, தரை தளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், வினோத் துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், இறந்த தகவலை தெரிவித்தனர்.இது குறித்து, பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE