சென்னை : துபாயில் இருந்து, இருவேறு விமானங்களில் கடத்திவரப்பட்ட, 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான, துபாய் நகரிலிருந்து, இருவேறு விமானங்கள் நேற்று நள்ளிரவு, சென்னை வந்தன.அந்த விமானங்களில் வந்த, சென்னையைச் சேர்ந்த ராவுத்தர், 44, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் வாகித், 34, மற்றும் சகுபர் சாதிக், 37, ஆகிய மூவரிடமும், சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில் அவர்களது, ஆசனவாய்கள் மற்றும் உடைகளுக்குள் இருந்து, 49.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 972 கிராம் தங்க கட்டிகள், பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்த சுங்கத்துறையினர், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE