சென்னை : பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவித செயல்பாடும் இல்லாத, சேமிப்பு கணக்கு குறித்த விபரங்களை, அஞ்சல் துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் நலநிதி, 2016ன் கீழ், கேட்பாரற்று இருக்கும் கணக்குகள், சான்றிதழ்களை கையாள்வது குறித்த அஞ்சல் துறையின் அறிவிப்பு:அஞ்சலகங்கள், வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் சேமிப்பு கணக்கு, பணத்தின் மேலாண்மை மற்றும் கையாளுதல் குறித்த விதிகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, எந்தவித செயல்பாடும் இல்லாத கணக்குகள் குறித்த விபரங்கள், பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும்.அந்த விதிமுறையை பின்பற்றி, இத்தகைய கணக்குகள் பற்றிய விபரங்களை, www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில், அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. விபரங்களுக்கு உள்ளூர் அஞ்சலகங்களை அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE