பட்டாபிராம் : பட்டாபிராம் பஸ் எரிப்பு வழக்கில், பா.ம.க.,வினர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
பட்டாபிராம், அமுதுார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; திருவள்ளூர் மாவட்ட, பா.ம.க., இளைஞர் அணி துணை தலைவர்.இவர் வீட்டிற்கு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த, பா.ம.க.,வினர், தனியார் நிறுவன பஸ்சை, தீயிட்டுக் கொளுத்தினர். இதுதொடர்பாக, பஸ் ஓட்டுனரான திருவள்ளூர், திருவூரைச் சேர்ந்த ரவி, 42, என்பவர், சமீபத்தில், போலீசில் சரண் அடைந்தார். பஸ்சை தீயிட்டு கொளுத்திய, அமுதுார்மேடு பகுதியைச் சேர்ந்த, பா.ம.க.,வைச் சேர்ந்த செல்வகுமார், 24, கீர்த்தி ராஜன், 31, ஆகிய இருவரை, பட்டாபிராம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE