சென்னை : 'இரண்டு நீர்நிலைகள் உட்பட, 18 இடங்களில் நில வகைப்பாடு மாற்ற, பொதுமக்கள், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம்' என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னையில், இரண்டாவது முழுமை திட்டப்படி, அறிவிக்கப்பட்ட நில வகைப்பாடுகளில், ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் கட்டணம் செலுத்தி, நில வகைப்பாடு மாற்றத்துக்காக விண்ணப்பிக்கின்றனர். இதில், பல இடங்களில், நீர்நிலை என உள்ள நிலங்கள், தனியார் பெயரில் இருப்பதால், அவை வகைப்பாடு மாற்றப்படுகின்றன.
இவ்வகையில், தற்போது, 18 தனியார் திட்டங்களுக்காக, நில வகைப்பாடு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. தொழில்நுட்ப குழு ஆய்வுக்கு அனுப்பும் முன், இது குறித்து, பொது மக்களின் கருத்தை கேட்க வேண்டும்.இதற்கான அறிவிப்பை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. இதில், எட்டு இடங்கள், விவசாய நிலங்கள், மூன்று தொழில் பகுதிகளை, வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்துள்ளது.
தாம்பரம் தாலுகாவில், கஸ்பாபுரம், பல்லாவரம் தாலுகாவில், ராஜாஜி நகர் ஆகிய இடங்களில், நீர்நிலை என்று உள்ள வகைப்பாட்டை, வேறு பயன்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக, பொதுமக்கள், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க, சி.எம்.டி.ஏ., அவகாசம் அளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE