சென்னை:சென்னை ஐ.ஐ.டி., யிலும், அண்ணா பல்கலையிலும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஐ.ஐ.டி., யில், 183 பேரும், அண்ணா பல்கலையில், எட்டு பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதையடுத்து, அண்ணா பல்கலையில், ஒரே நுழைவுவாயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, கட்டட அமைப்பியல் கல்லுாரி ஆகியவற்றுக்கு, பதிவாளர் கருணாமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அண்ணா பல்கலையில், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஒரே நுழைவு வாயில் திட்டம் அமலுக்கு வருகிறது.
கோட்டூர்புரம் பகுதியில் உள்ள நுழைவு வாயில், தற்காலிகமாக மூடப்படுகிறது. பல்கலைக்குள் வருபவர்கள், பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டும் வந்து செல்லலாம்.முக கவசம் அணிந்தே, பல்கலைக்குள் வர வேண்டும். இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE