சென்னை:சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்க நீதிமன்றங்களில், நீதிபதியாக பணிபுரிந்தவர், கர்ணன்.
இவர், நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து, வழக்கு பதிவு செய்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், டிச., 2ல், கர்ணனை கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீன் கோரி, சென்னை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், ஜாமீன் கேட்டு, சென்னை அமர்வு நீதிமன்றத்தில், கர்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. கர்ணனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE